கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிதம்பரத்தை அடுத்த கீரப்பாளையத்தில் மோடி அரசின் கருப்பு வேளாண் சட்டங்களை எதிர்த்து கையெழுத்து இயக்கம் பொதுமக்களிடமும் விவசாயிகளிடமும் கையெழுத்து பெற்ற போது. இந்நிகழ்வில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு நகர் பெரியசாமி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் டாக்டர் கே. ஐ. மணிரத்தினம், கையெழுத்து இயக்க மாவட்ட பொறுப்பாளர் திரு கணிவண்ணன் மற்றும் திரு சித்தார்த்தன், வட்டார தலைவர் திரு. செழியன் அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே எஸ் அழகிரி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து கையெழுத்து இயக்கத்தைப் பற்றி ஆலோசனை செய்தனர்.