செய்தி வெளியீடுகள்

30 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடிய மனித உரிமை செயற்பாட்டாளர் திரு. ஸ்டேன் சுவாமி அவர்களின் பிறந்தநாளான இன்று அவரது சேவைகளை நினைவு கூற விரும்புகிறேன்.- தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

26-April-2024 அறிக்கை 30 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடிய மனித உரிமை செயற்பாட்டாளர் திரு. ஸ்டேன் சுவாமி அவர்களின் பிறந்தநாளான இன்று அவரது சேவைகளை நினைவு கூற விரும்புகிறேன். திருச்சி மாவட்டம், விரகலூரில் பிறந்த இவர், பிற்காலங்களில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாழ்கிற பழங்குடியின மக்களோடு நெருங்கி பழகி, அவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் போராடியவர். கடந்த 2018 ஆம் ஆண்டு பீமாகொரேகான் நினைவிடத்தில் வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக ...

எந்த நோக்கத்திற்காக கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கம் முழுமையாக நிறைவேற தமிழக கல்வித்துறை உரிய நடவடிக்கைகளை விழிப்புணர்வோடு எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.- தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

24-April-2024 அறிக்கை நீண்ட நெடுங்காலமாக கல்வித்துறையில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து பெருமை பெற்று வருகிறது. காங்கிரஸ் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனைவருக்கும் கல்வியை வழங்க வேண்டுமென்ற நல்ல நோக்கத்தில் 2009 ஆம் ஆண்டில் கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இச்சட்டத்தின்படி 6 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வியை அளிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. கல்வி பெறுவது சட்ட ...

இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்கிற வகையில் அமைதியான முறையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குச்சாவடிகளுக்கு வருகை புரிந்து வாக்கினை அளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழக வாக்காள பெருமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

22-April-2024 அறிக்கை இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் 2024 மக்களவை தேர்தலின் முதல்கட்டமாக தமிழகத்தில் அமைதியாக 70 சதவிகித வாக்குப்பதிவுடன் நடந்து முடிந்திருக்கிறது. ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையே நடைபெற்ற தேர்தலில் தமிழக மக்கள் பெருவாரியாக இந்தியா கூட்டணியை ஆதரிக்கிற வகையில் வாக்களித்திருக்கிறார்கள் என்ற உறுதியான செய்தி மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து செயல்பட்ட பெருமை தமிழக முதலமைச்சர் திரு ...

நாளை காலை 7 மணி முதல் தொடங்குகிற வாக்குப் பதிவில் எவ்வளவு விரைவாக சென்று வாக்களிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக சென்று தவறாமல் உங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டுமென வாக்காள பெருமக்களை அன்போடு வேண்டுகிறேன். நீங்கள் அளிக்கிற ஒவ்வொரு வாக்கும் 140 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்கிற கடமை உணர்வோடு உங்கள் வாக்குகளை மிகுந்த பொறுப்புணர்வோடு அளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். – தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

18-April-2024 அறிக்கை நாட்டில் இதுவரை நடைபெற்ற மக்களவை தேர்தல்களிலேயே மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக வருகிற மக்களவைத் தேர்தல் அமைந்திருக்கிறது. இது இந்தியாவின் எதிர்காலத்தையும், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் நிர்ணயிக்கப் போகிற தேர்தலாகும். இந்தியாவில் ஜனநாயகம் நீடிக்கப் போகிறதா ? சர்வாதிகாரம் நீடிக்கப் போகிறதா ? என்பது குறித்து வாக்காளப் பெருமக்கள் முடிவு செய்ய வேண்டிய தேர்தல். சுதந்திர இந்தியா காணாத வகையில் இந்திய அரசமைப்புச் சட்டம் கடுமையான தாக்குதலுக்கு ...

இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தியா கூட்டணியால் அமைய இருக்கும் ஆட்சியில் அனைத்து கிறிஸ்துவ திருச்சபைகளுக்கும் அரசு அங்கீகாரம் அளித்து வழிபாட்டு சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு அளிக்கும் கோரிக்கையை முழுமனதோடு காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்கிறது. இந்த பின்னணியில் இந்திய கிறிஸ்துவ சங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு வருகிற மக்களவை தேர்தலில் தங்களது அமைப்புகளோடு இணைந்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.- தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

16-April-2024 அறிக்கை இந்தியா முழுவதிலும் உள்ள பெந்தெகொஸ்தே மற்றும் சுயாதீன திருச்சபைகளின் ஆராதனை வழிபாட்டு உரிமைகள் பாதுகாக்கப்படவும், இந்திய கிறஸ்துவர்களின் அனைத்து விதமான உரிமைகள் மற்றும் திருச்சபைகளின் நலன்காக்க யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சேவை செய்ய இந்திய கிறிஸ்துவ சங்கம் உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. ஆனால், பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதற்கொண்டு இந்த அமைப்புகள் சுதந்திரமாக தனித்தன்மையுடன் செயல்பட இயலாத வகையில் வகுப்புவாத சக்திகளும், வன்முறை கும்பல்களும் அச்சுறுத்தி ...