செய்தி வெளியீடுகள்

தூய்மைப் பணியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

14/08/2025 அறிக்கை நேற்று இரவு தூய்மைப் பணியாளர்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் அப்புறப்படுத்தியிருப்பது வேதனையளிக்கிறது. நீதிமன்றம் கூறினாலும் கூட காவல்துறை தாயுள்ளத்தோடு அணுகியிருக்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. கடைக்கோடி பணியில் இருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவுக் கரம் அளித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவும், கைது செய்யப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களையும், அவர்களுக்காக போராடிய ஜனநாயக சக்திகளையும் விடுவிக்க மாண்புமிகு தமிழ்நாடு ...

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் அதை முழுமையாக நிதி ஒதுக்கி நிறைவேற்றுவதற்கு பா.ஜ.க. அரசு தொடக்கத்திலிருந்தே புறக்கணித்து வந்தது. அதற்கான நிதியும் குறைக்கப்பட்டது. கடந்த

12/08/2025 அறிக்கை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு வழங்குவதற்காக தேசிய ஊரக வேலை வாய்ப்பு சட்டம் 2005 இல் கொண்டு வரப்பட்டு ஆண்டுக்கு 100 நாள் வேலை உறுதி செய்யப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்ற பெயரில் மொத்த மக்கள் தொகையில் கிராமப்புறங்களில் வாழ்கிற 65 சதவிகித மக்களுக்கு குறைந்தபட்ச வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டது. இத்திட்டத்தினால் பட்டியலின மக்கள் ...

தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தோலுரித்து காட்டிய தேர்தல் ஆணையத்தின் மோசடிகளையும், பாஜகவின் வெற்றிக்கு துணை போவதையும் கண்டிக்கிற வகையில் எனது தலைமையில் நாளை (11.08.2025) திங்கட்கிழமை மாலை 04:00 மணியளவில் சென்னை, சைதாபேட்டை, பனகல் மாளிகை அருகில் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் முன்னின்று நடத்தும் கண்டன ஆர்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று குரல் எழுப்ப வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

10/08/2025 அறிக்கை தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் தேர்தல் ஆணையத்தின் மோசடிகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார். ஆனால் அதற்கு நேரடியாக பதில் கூற முன்வராத தேர்தல் ஆணையம் ராகுல் காந்தி அவர்கள் பிரமாணம் எடுத்து குற்றச்சாட்டை கூறினால் நடவடிக்கை எடுக்க தயார் என கூறியிருக்கிறது. ஊடகங்கள் வாயிலாக திரை வெளியீட்டின் மூலம் புள்ளி விபரங்களோடு குற்றச்சாட்டுக்களை கூறிய பிறகு தேர்தல் ஆணையம் திசை ...

கடந்த மே மாதம் பிரதமர் திரு மோடி அவர்கள் இலங்கை சென்றபோது, மீனவர்கள் பிரச்சனையின் முக்கிய அம்சங்கள் குறித்து இருதரப்பும் விரிவாக ஆலோசனை செய்ததாகக் கூறப்பட்டது. அதை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வந்து இரு நாட்டு மீனவர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டும்.

09/08/2025 அறிக்கை தமிழ்நாட்டு மீனவர்கள் 8 பேரை இன்று (09.08.2025) இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 6 ஆம் தேதி கற்பிட்டி பகுதியில் விசைப்படகு மீனவர்கள் 10 பேரும், கச்சத்தீவு அருகே நாட்டுப்படகு மீனவர்கள் 4 பேரும் படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், அவர்கள் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்களின் ...

இந்திய தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும், பா.ஜ.க.வுக்கு உடந்தையாக இருப்பதையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக வருகிற திங்கட்கிழமை 11.8.2025 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக 11.8.2025 அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

08/08/2025 அறிக்கை தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பா.ஜ.க. தொடர்ந்து முறைகேடுகளை நிகழ்த்தி வெற்றி பெற்று வருவதை தலைவர் ராகுல்காந்தி ஆதாரங்களுடன் நேற்று தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். கர்நாடகாவில் ஒரே சட்டப்பேரவை தொகுதியில் 1 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்ப்பு, ஒரே அறை கொண்ட வீட்டில் 80 வாக்காளர்கள், ஒரே வாக்காளருக்கு 4 வாக்குச்சாவடியில் ஓட்டு என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன் வெளியிட்டார். பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு ...