செய்தி வெளியீடுகள்

தேர்தல்களின் போது எடுக்கப்படுகின்ற CCTV காட்சிகள், வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை 45 நாட்களுக்குப் பிறகு அழித்து விடலாம் என்று முடிவு செய்திருப்பது நேர்மையான தேர்தல் நடைபெறுவதை பாதிக்கக் கூடிய செயலாகும்.

21-June-2025 |  இந்திய வரலாற்றில் முதல் முறையாக வெளிநாட்டின் நிதியுதவியும், கார்ப்பரேட்டுகளின் நன்கொடையும் அரசியல் கட்சிகளுக்கு வழங்குவது பா.ஜ.க. ஆட்சியில் சட்டப்பூர்வமாக்கப்பட்டன. கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக பொருளாதார கொள்கைகளை வடிவமைத்து அதன்மூலம் பல்வேறு சலுகைகளை அளித்து அவர்கள் பெரும் லாபம் ஈட்டுகிற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மோடியின் மிக நெருங்கிய நண்பர்களான அதானி, அம்பானி ஆகியோர் குவித்த சொத்துக்கள் பலமடங்கு பெருகியதை ...

ஆர்.எஸ்.எஸ்., சனாதன, பாசிச கொள்கைகளை கொண்ட பா.ஜ.க.வின் சுயரூபத்தை தான் மதுரை முருக பக்தர்கள் மாநாடு வெளிப்படுத்துகிறது. முருக பக்தர்கள் செல்ல வேண்டிய இடம் அறுபடை வீடுகளே தவிர, பா.ஜ.க. மதுரையில் நடத்துகிற முருக பக்தர்கள் மாநாடு அல்ல. முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பா.ஜ.க. அரசியல் மாநாடு நடத்துகிறது.

18-June-2025 |  2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை கீழடி அகழாய்வுப் பணிகளை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா பல்வேறு ஆதாரங்களை அறிவியல் பூர்வமாக வெளிக் கொண்டு வந்தார். ஆனால், மேலும் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த அறிவியல் ஆதாரங்கள் வேண்டும் என்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. தமிழர்கள் 5350 ஆண்டு பழமை கொண்டவர்கள், தொழில்நுட்பங்களை கொண்டவர்கள், மூத்த நாகரீகம் படைத்த முதுமக்கள் என்று உலக ஆய்வு முடிவுகள் ஒப்புக் ...

கடந்த 2014, 2019 மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடுத்த 512 வாக்குறுதிகளில் 50 கூட நிறைவேற்றப்படவில்லை என கோணி புளுகன் கோயபல்சை மிஞ்சுகிற வகையில் காழ்ப்புணர்ச்சியுடன் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து கூறியிருக்கிறார். பதவி போன பிறகு காணாமல் போய்விட்டதாக யாரும் கருதக் கூடாது என்பதற்காக தனது இருப்பை காட்டிக் கொள்வதற்கு இத்தகைய அவதூறு கருத்துக்களை கூறி வருகிறார்.

13-June-2025 |  கடந்த 2014, 2019 மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடுத்த 512 வாக்குறுதிகளில் 50 கூட நிறைவேற்றப்படவில்லை என கோணி புளுகன் கோயபல்சை மிஞ்சுகிற வகையில் காழ்ப்புணர்ச்சியுடன் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து கூறியிருக்கிறார். பதவி போன பிறகு காணாமல் போய்விட்டதாக யாரும் கருதக் கூடாது என்பதற்காக தனது ...

கடந்த 2015 முதல் 2024 வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றை பயன்படுத்தி ஆட்சிகளை கவிழ்த்து பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. அனைத்து நிலைகளிலும் ஜனநாயகத்திற்கு விரோதமாக பாசிச, சர்வாதிகார ஆட்சியை நடத்தும் பிரதமர் மோடிக்கு எதிராக மக்களின் கருத்துகளை திரட்டுவதற்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் எடுக்கிற முயற்சிகளுக்கு நாட்டு மக்களின் ஆதரவை பெறுவதன் மூலமே ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும்.

10-June-2025 |  உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக 140 கோடி மக்கள் தொகையை கொண்டு, 97 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் கடந்த 2024 மக்களவை தேர்தலில் 64 கோடி பேர் வாக்களித்திருக்கிறார்கள். 1952 மக்களவை தேர்தல் முதற்கொண்டு, தேர்தல் ஆணையத்தின் மீதிருந்த நம்பிக்கை சமீபகாலங்களில் சிதைந்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் கூறியதற்கு தேர்தல் ஆணையம் பதில் ...

தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தி வருகிற பா.ஜ.க.வின் மாய்மால அரசியல் ஒருபோதும் எடுபடாது. தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சி என்பது கானல் நீராகத் தான் இருக்கப் போகிறது.

09-June-2025 |  இந்தியாவிலேயே பா.ஜ.க. காலூன்ற முடியாத வகுப்புவாத எதிர்ப்பு மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். நேற்று மதுரையில் நடைபெற்ற பா.ஜ.க. கூட்டத்தில் 2026 இல் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் அமைய இருக்கிற கூட்டணிக்கு அ.தி.மு.க. தலைமையேற்கப் போகிறதா ? அல்லது பாரதிய ஜனதா தலைமையேற்கப் போகிறதா ? என்பது முடிவு ...