செய்தி வெளியீடுகள்

எந்த நிலையிலும் எவருக்கும் அஞ்சாமல் விடுதலைப் போராட்ட காலத்தில் பல ஆண்டுகாலம் சிறையில் இருந்த நேரு பாரம்பரியத்தில் வந்த இந்திரா காந்தியின் பெருமையை விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு பெறாத ஆர்.எஸ்.எஸ். வழிவந்த பா.ஜ.க. அறிந்திருக்க வாய்ப்பில்லை.- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

26-June-2024 அறிக்கை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலும், மணிப்பூரில் இருந்து மும்பை வரையிலும் தேசிய ஒற்றுமை பயணங்களை மேற்கொண்டு மக்களை நேரடியாக சந்தித்து உரையாடி, பிரச்சினைகளை புரிந்து கொண்டு அதற்காக குரல் கொடுத்து மக்கள் தலைவராக உயர்ந்து நின்ற தலைவர் ராகுல்காந்தி மக்களவையின் எதிர்கட்சித் தலைவராக இன்று பொறுப்பேற்பது நாட்டு மக்களிடையே மிகுந்த எழுச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த மக்களவை தேர்தலில் 10 ஆண்டுகால நரேந்திர மோடியின் மக்கள் விரோத, ...

அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படியும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் எனது தலைமையில் நாளை (21.6.2024) மாலை 3.00 மணியளவில் சென்னை துறைமுகம் எதிரில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

20-June-2024 அறிக்கை ஒன்றியத்தில் பா.ஜ.க. அரசும், தமிழகத்தில் அ.தி.மு.க. அரசும் ஆட்சி செய்த 2017 ஆம் ஆண்டு தொடங்கி இந்தியாவில் நீட் தேர்வு முறை இருந்து வருகிறது. நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பல கட்டங்களாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. மேலும், நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து அக்குழுவின் பரிந்துரைகளை சட்ட மசோதாவாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் மூலம் மேதகு குடியரசுத் ...

மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி வாக்கு வங்கியை விரிவுபடுத்தும் முயற்சிக்கு கடந்த மக்களவை தேர்தலில் சரியான பாடத்தை மக்கள் புகட்டியிருக்கிறார்கள்.- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

13-June-2024 அறிக்கை கடந்த மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறாததையெல்லாம் இட்டுக்கட்டி பேசி சிறுபான்மையின மக்களுக்கு எதிராக கடுமையான தாக்குதலை நரேந்திர மோடி தொடுத்தார். அதேபோல, மக்களவை தேர்தலில் பா.ஜ.க. சார்பில் 2014 இல் வெற்றி பெற்ற 283 பேரிலும், 2019 இல் வெற்றி பெற்ற 303 பேரிலும், 2024 இல் வெற்றி பெற்ற 240 பேரிலும் ஒருவர் கூட சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர் இல்லை ...

தலைவர் ராகுல்காந்திக்கும், தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் இடையே இருக்கிற கொள்கை சார்ந்த இணக்கத்தின் காரணமாகவே இந்தியா கூட்டணி தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

12-June-2024 அறிக்கை நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி புதுச்சேரி உட்பட நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை கொண்டாடுகிற வகையில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், வெற்றிக்காக பாடுபட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், காங்கிரஸ் இயக்கத்தை எப்படி வலிமைப்படுத்துவது என்பது குறித்தும் விவாதிப்பதற்காக நேற்று 11.6.2024 அன்று சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் எனது தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தொடக்கத்தில் ஏழு ...

தமிழக அரசியலில் வலிமைமிக்க சக்தியாக காங்கிரசை பலப்படுத்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே, தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் வழிகாட்டுதலோடு, எதிர்கால செயல் திட்டங்களை வகுக்க ஜூன் 11 ஆம் தேதி காமராஜர் அரங்கத்தில் காங்கிரஸ் பொதுக்குழு கூடுகிறது. பொதுக்குழுவுக்கு அழைக்கப்பட்ட அனைவரும் தவறாமல் வருகை தந்து கட்சியை வலிமைப்படுத்துகிற முயற்சிக்கு உறுதுணையாக ஆக்கபூர்வமான கருத்துகளை கூறுவதற்கு தவறாமல் வருகை தரும்படி அன்புடன் அழைக்கிறேன். – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

03-June-2024 அறிக்கை இந்திய ஜனநாயக வரலாற்றில் 18-வது மக்களவை தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையே நடைபெற்ற தேர்தலாகும். இத்தேர்தல் முடிவின் மூலம், சர்வாதிகாரம் வீழ்த்தப்பட்டு, ஜனநாயகம் வெற்றி பெற்றிருக்கிறது. மக்கள் விரோத மோடி ஆட்சி அகற்றப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் நடந்த ஜனநாயக விரோதச் செயல்களை இனி நிகழ்த்த முடியாது. இந்த தேர்தல் முடிவின் மூலம் தலைவர் ...