செய்தி வெளியீடுகள்

மத்ராசி கேம்ப்” இடிப்பிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

02-June-2025 |  மத்ராசி கேம்ப்” இடிப்பிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். டில்லி, ஜங்க்ப்புரா பகுதியில் உள்ள 'மத்ராசி கேம்ப்' எனப்படும் குடிசைப் பகுதியில் தமிழர்களின் வீடுகள் நூற்றுக்கணக்கில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில், நீதிமன்ற உத்தரவை மேற்கோளாகக் கொண்டு இடிக்கப்பட்டுள்ளது. இந்த செயலால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்களது குடியிருப்புகளை இழந்து, வீதிகளில் தங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை முற்றிலும் மனிதாபிமான ...

நாட்டு மக்களுக்கு உண்மையை நிலையை தெரிவிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட வேண்டும் என திரு. ராகுல் காந்தி மற்றும் திரு. மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் வலியுறுத்தியுள்ளதை செயல்படுத்த வேண்டுமேன தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

02-June-2025 |  ஏப்ரல் 22ல் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடி தாக்குதலில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும், தீரத்துடனும் ஈடுபட்டு, பெரும் தியாகங்கள் புரிந்துள்ள முப்படை வீரர்களை போற்றி, பாராட்டுகிறேன். இந்த தாக்குதலின் போது, இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்திருந்த ...

குற்றவாளி ஞானசேகரனுக்கு தரப்படும் கடுமையான தண்டனையின் மூலம் பெண்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வையும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் தடுக்கமுடியும்.

28-May-2025 |  அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் வழக்கின்; தண்டனை விவரத்தை ஜூன் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட புகாரில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ...

ஊடக சுதந்திரம் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, அரசாங்கத்தின் பணம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு இல்லாமல் சுமூகமாக செயல்பட முடியாத நிலை உள்ளது. பொதுமக்களுக்கு ஒலிபரப்புத் துறையினால் பரப்பப்பட வேண்டிய செய்திகள் அரசாங்கத்தின் விருப்பத்தை மெய்ப்பிக்கும் கருவியாக மாற்றப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை, வருவாய்த்துறை மற்றும் புலனாய்வுத்துறை போன்றவற்றின் தவறான பயன்பாடுகளினால் மக்கள் மனதில் அச்சம் மற்றும் பயத்தை உருவாக்கியுள்ளனர்.

27-May-2025 |  இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, பண்டித ஜவஹர்லால் நேரு, புதிய தேசம் ஒன்றை உருவாக்கும் பொறுப்பை தம் தோளில் ஏற்றார். இந்தியா எப்படி இருக்க வேண்டும், அதன் அடையாளம் என்னவாக இருக்க வேண்டுமென்ற தெளிவை கொண்டவர். அவருடைய பார்வையில் இந்தியா என்பது ஒரு ஜனநாயகமும், மதச்சார்பற்ற தன்மையுடனும், அறிவியல் மனப்பான்மையுடனும், சமத்துவத்தையும் சமூக நியாயத்தையும் நிலைநாட்டும் நாடாக இருக்க வேண்டும், கல்வி நாட்டை மாற்றும் மிக முக்கிய கருவியாக ...

2014இல் மோடி ஆட்சிக்கு வந்த பின், கடந்த 10 ஆண்டுகளில் அரசியல்வாதிகள் மீது அமலாக்கத்துறை தொடுத்துள்ள வழக்குகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. ஆனால் இவற்றில் 95 சதவீத வழக்குகள் எதிர்கட்சி தலைவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

22-May-2025 |  மோடி அரசின் ஏவலாளியாக, ஊதுகுழலாக கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டும் வரும் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் இன்று சவுக்கடி கொடுத்துள்ளது. தமிழக டாஸ்மாக்கிற்கு எதிரான விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என்று கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான ...