செய்தி வெளியீடுகள்

சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள காமராஜர் அரங்க முகப்பிலும், சென்னை திரு.வி.க. சாலையில் அமைந்துள்ள சத்தியமூர்த்தி பவன் முகப்பிலும் மக்களின் தாகத்தை தீர்க்க நீர்மோர் பந்தல் மே 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை அமைக்கப்படவுள்ளது. இவ்விரு இடங்களிலும் வருகிற மே 1 ஆம் தேதி நீர்மோர் பந்தல்க ளை தொடக்கி வைக்க இருக்கிறேன். தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

29-April-2024 அறிக்கை தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வருகிறது. வானிலை ஆராய்ச்சி மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த இருவார காலமாக 13 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து மக்களை வாட்டி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் அவர்களின் தாகத்தை தீர்க்க நீர்மோர் பந்தல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட உள்ளது சென்னை தேனாம்பேட்டையில் ...

தமிழகத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரண நிதி வழங்காத பிரதமர் மோடி தமிழக மக்களுக்காக பேசுவது அப்பட்டமாக நீலிக் கண்ணீர் வடிப்பதாகத் தான் கருத முடியும். தமிழக மக்கள் மீதோ, தமிழக வாழ்வாதாரத்தின் மீதோ கொஞ்சம் கூட கருணை காட்டாத அணுகுமுறையை தான் பிரதமர் மோடி கையாண்டு வருகிறார் என்பதற்கு உள்துறை அமைச்சகத்தின் நிதி ஒதுக்கீடு மேலும் உறுதி செய்கிறது. இத்தகைய வஞ்சிக்கிற ஒன்றிய பா.ஜ.க. அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

27-April-2024 அறிக்கை கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. தென் மாநிலங்களிடையே குறிப்பாக தமிழகத்திற்கு கடுமையாக பாரபட்சத்துடன் நிதி ஒதுக்கப்பட்டு வருவதை எதிர்த்து கடுமையான கண்டனங்களை வெளிப்படுத்தியிருக்கிறோம். கடந்த டிசம்பர் 2023 இல் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ள பாதிப்புக்கு தேசிய பேரிடர் நிவாண நிதியிலிருந்து ரூபாய் 38,000 கோடி நிதி ஒதுக்க தமிழ்நாடு ...

30 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடிய மனித உரிமை செயற்பாட்டாளர் திரு. ஸ்டேன் சுவாமி அவர்களின் பிறந்தநாளான இன்று அவரது சேவைகளை நினைவு கூற விரும்புகிறேன்.- தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

26-April-2024 அறிக்கை 30 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடிய மனித உரிமை செயற்பாட்டாளர் திரு. ஸ்டேன் சுவாமி அவர்களின் பிறந்தநாளான இன்று அவரது சேவைகளை நினைவு கூற விரும்புகிறேன். திருச்சி மாவட்டம், விரகலூரில் பிறந்த இவர், பிற்காலங்களில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாழ்கிற பழங்குடியின மக்களோடு நெருங்கி பழகி, அவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் போராடியவர். கடந்த 2018 ஆம் ஆண்டு பீமாகொரேகான் நினைவிடத்தில் வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக ...

எந்த நோக்கத்திற்காக கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கம் முழுமையாக நிறைவேற தமிழக கல்வித்துறை உரிய நடவடிக்கைகளை விழிப்புணர்வோடு எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.- தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

24-April-2024 அறிக்கை நீண்ட நெடுங்காலமாக கல்வித்துறையில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து பெருமை பெற்று வருகிறது. காங்கிரஸ் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனைவருக்கும் கல்வியை வழங்க வேண்டுமென்ற நல்ல நோக்கத்தில் 2009 ஆம் ஆண்டில் கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இச்சட்டத்தின்படி 6 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வியை அளிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. கல்வி பெறுவது சட்ட ...

இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்கிற வகையில் அமைதியான முறையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குச்சாவடிகளுக்கு வருகை புரிந்து வாக்கினை அளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழக வாக்காள பெருமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

22-April-2024 அறிக்கை இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் 2024 மக்களவை தேர்தலின் முதல்கட்டமாக தமிழகத்தில் அமைதியாக 70 சதவிகித வாக்குப்பதிவுடன் நடந்து முடிந்திருக்கிறது. ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையே நடைபெற்ற தேர்தலில் தமிழக மக்கள் பெருவாரியாக இந்தியா கூட்டணியை ஆதரிக்கிற வகையில் வாக்களித்திருக்கிறார்கள் என்ற உறுதியான செய்தி மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து செயல்பட்ட பெருமை தமிழக முதலமைச்சர் திரு ...