நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தலைவர் ராகுல் காந்தி அனுப்பிய வாழ்த்து செய்திக்கு நன்றி தெரிவித்து வெளியிடப்பட்ட செய்தியில் ‘கூட்டாட்சி கருத்தியலை உயர்த்தி பிடிக்க ஒன்று சேர்ந்து உழைப்போம்” என்று கூறியதன் மூலம் இந்தியா கூட்டணி மேலும் வலிமை பெற்று வருகிறது. இதன்மூலம் மோடி ஆட்சி அகற்றப்பட்டு இந்தியா கூட்டணி ஒளிரப் போகிறது என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.
02-March-2024 அறிக்கை பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்தது முதற்கொண்டு மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அதிகாரக் குவியல் படிப்படியாக நடந்து வருகின்றது. ஒற்றை ஆட்சி என்ற குறிக்கோளுடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற இலக்கை அடைவதன் மூலம் முழுமையான ஒற்றை ஆட்சியை உறுதி செய்து மாநிலங்களை நகராட்சிகளைப் போல நடத்த முற்படுகிறார். ஒன்றிய அரசின் நிதிப் பகிர்வில் அப்பட்டமான பாரபட்சம் ...
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டாரப் பகுதியைச் சார்ந்த திரு. பிரபாகரன் என்ற திருமணமாகாத 25 வயதுடைய பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் தஞ்சை மாவட்டம், ஓரத்தநாடு பகுதியில் விவசாய கூலியாக வேலை செய்து வந்துள்ளார். நேற்றிரவு மர்மமான முறையில் அவர் வேலை பார்க்கும் இடத்தில் இறந்துள்ளார். இம்மரணம் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. எனவே இறந்தவரின் உடலுக்கு நடத்தப்படும் மருத்துவ உடற்கூறாய்வில் எவருடைய தலையீடும் இல்லாமல் நேர்மையான முறையில் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். – தலைவர் திரு @SPK_TNCC MLA
27-Feb-2024 அறிக்கை திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டாரப் பகுதியைச் சார்ந்த திரு. பிரபாகரன் என்ற திருமணமாகாத 25 வயதுடைய பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் தஞ்சை மாவட்டம், ஓரத்தநாடு பகுதியில் விவசாய கூலியாக வேலை செய்து வந்துள்ளார். நேற்றிரவு மர்மமான முறையில் அவர் வேலை பார்க்கும் இடத்தில் இறந்துள்ளார். இம்மரணம் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. எனவே இறந்தவரின் உடலுக்கு நடத்தப்படும் மருத்துவ உடற்கூறாய்வில் எவருடைய தலையீடும் இல்லாமல் நேர்மையான ...
இன்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எடுத்துள்ள முடிவை தமிழ் மாநில காங்கிரசில் இருக்கிற உண்மையான தொண்டர்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவர் எடுத்த முடிவின் காரணமாக ஜி.கே. மூப்பனாரின் ஆத்மா இவரை மன்னிக்காது – தலைவர் திரு @SPK_TNCC MLA
26-Feb-2024 அறிக்கை தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவர்களை சந்தித்து பா.ஜ.க. கூட்டணியில் சேருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க முன் வராத நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் முதல் கட்சியாக பா.ஜ.க.வுடன் இணைந்திருக்கிறது. தமிழக மக்களால் தொடர்ந்து வெறுக்கப்பட்டு வருகிற பா.ஜ.க.வுடன் த.மா.கா. கூட்டு சேர்ந்திருக்கிறது. மறைந்த மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் காங்கிரசை ...
அனைவரது உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிப் பரவ தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தலைவர் திரு கே எஸ் அழகிரி
14-Jan-2024 பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இந்தியாவில் மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்துத் தரப்பு தமிழ் மக்களாலும் கொண்டாடும் இந்த பொங்கல் விழா, விவசாயிகள் விளைவித்த பயிர்களை அறுவடை செய்ய அத்தனை நாளும் தமக்கு உதவிய சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபடும் நன்னாளாகும். அன்றைய தினம் குளித்து புத்தாடை அணிந்து நண்பர்களுடனும், உறவினர்களுடனும் இணைந்து இவ்விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றனர். மேலும், ...
தமிழகத்தின் கடனைப் பற்றி பேசுகிற அண்ணாமலை, ஒன்றிய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால கடன் சுமை 100 லட்சம் கோடி அதிகரித்திருப்பதைப் பற்றி என்ன பதில் கூறப் போகிறார் ? – தலைவர் திரு கே எஸ் அழகிரி
06-Jan-2024 அறிக்கை இந்தியாவிலேயே எத்தகைய உத்தியை கையாண்டாலும் பா.ஜ.க.வின் வாக்கு வங்கியை விரிவுபடுத்த முடியாத ஒரே மாநிலமாக மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளின் எக்கு கோட்டையான தமிழகம் விளங்குகிறது. சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகிய அமைப்புகளின் மூலம் ஏவி, பா.ஜ.க.வை எதிர்க்கும் தி.மு.க. அமைச்சர்கள் மீதும், எதிர்கட்சித் தலைவர்கள் மீதும் பல்வேறு சோதனைகள், வழக்குகள் என அடக்குமுறைகளை ஏவி விட்டாலும் தமிழகத்தில் ...