திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டாரப் பகுதியைச் சார்ந்த திரு. பிரபாகரன் என்ற திருமணமாகாத 25 வயதுடைய பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் தஞ்சை மாவட்டம், ஓரத்தநாடு பகுதியில் விவசாய கூலியாக வேலை செய்து வந்துள்ளார். நேற்றிரவு மர்மமான முறையில் அவர் வேலை பார்க்கும் இடத்தில் இறந்துள்ளார். இம்மரணம் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. எனவே இறந்தவரின் உடலுக்கு நடத்தப்படும் மருத்துவ உடற்கூறாய்வில் எவருடைய தலையீடும் இல்லாமல் நேர்மையான முறையில் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். – தலைவர் திரு @SPK_TNCC MLA

27-Feb-2024

அறிக்கை

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டாரப் பகுதியைச் சார்ந்த திரு. பிரபாகரன் என்ற திருமணமாகாத 25 வயதுடைய பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் தஞ்சை மாவட்டம், ஓரத்தநாடு பகுதியில் விவசாய கூலியாக வேலை செய்து வந்துள்ளார். நேற்றிரவு மர்மமான முறையில் அவர் வேலை பார்க்கும் இடத்தில் இறந்துள்ளார். இம்மரணம் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. எனவே இறந்தவரின் உடலுக்கு நடத்தப்படும் மருத்துவ உடற்கூறாய்வில் எவருடைய தலையீடும் இல்லாமல் நேர்மையான முறையில் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

இந்த மரணத்திற்கு எவரேனும் தூண்டுதலாக இருந்திருந்தால் அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுத்து, உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டுமென்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரை கேட்டுக் கொள்கிறேன். மேலும் இறந்த திரு. பிரபாகரனின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கி உதவிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.

– தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.