கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூர் தொட்டிபாலத்தில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜர் அவர்களின் உருவம் பதித்த கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெருந்தலைவர் காமராஜர் மீது அளவற்ற பற்று கொண்டுள்ள அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.  –  தலைவர் திரு கு செல்வப்பெருத்தகை MLA

கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூர் தொட்டிபாலத்தில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜர் அவர்களின் உருவம் பதித்த கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெருந்தலைவர் காமராஜர் மீது அளவற்ற பற்று கொண்டுள்ள அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது. – தலைவர் திரு கு செல்வப்பெருத்தகை MLA

read more
தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஞாயிறு அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் இரண்டு மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீன்வளத்துறையிடம் 427 மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான அனுமதி அட்டையை பெற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இந்த கைது சம்பவம் நடந்திருக்கிறது. –  தலைவர் திரு கு செல்வப்பெருத்தகை MLA

தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஞாயிறு அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் இரண்டு மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீன்வளத்துறையிடம் 427 மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான அனுமதி அட்டையை பெற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இந்த கைது சம்பவம் நடந்திருக்கிறது. – தலைவர் திரு கு செல்வப்பெருத்தகை MLA

read more
ஒன்றிய பா.ஜ.க. அரசு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் கிராமப்புற பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கின்ற வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முதுகெலும்பாக திகழ்கிற கிராமப்புற மக்களுக்கான நிதி ஒதுக்கீடு கடுமையாக குறைக்கப்பட்டிருக்கிறது. தலைவர் திரு கு செல்வப்பெருத்தகை MLA

ஒன்றிய பா.ஜ.க. அரசு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் கிராமப்புற பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கின்ற வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முதுகெலும்பாக திகழ்கிற கிராமப்புற மக்களுக்கான நிதி ஒதுக்கீடு கடுமையாக குறைக்கப்பட்டிருக்கிறது. தலைவர் திரு கு செல்வப்பெருத்தகை MLA

read more
கவனக்குறைவு காரணமாக அப்பாவி மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும். இத்தகைய பேரிழப்புகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். –  தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

கவனக்குறைவு காரணமாக அப்பாவி மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும். இத்தகைய பேரிழப்புகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். –  தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

read more
நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேவர்சோலை பேரூராட்சி இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த திரு. ஜம்ஷிர் அவர்கள் யானை தாக்கி இறந்ததாக கடந்த 25 ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடற்கூறு ஆய்விற்குப் பின்னர் அவர் யானை தாக்கி பலியாகவில்லை என்றும், அவரது மரணம் கொலையாக இருக்கலாம் என்றும் தற்போது தெரிய வந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேவர்சோலை பேரூராட்சி இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த திரு. ஜம்ஷிர் அவர்கள் யானை தாக்கி இறந்ததாக கடந்த 25 ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடற்கூறு ஆய்விற்குப் பின்னர் அவர் யானை தாக்கி பலியாகவில்லை என்றும், அவரது மரணம் கொலையாக இருக்கலாம் என்றும் தற்போது தெரிய வந்துள்ளது.

read more
தமிழக ஆளுநர் என்பவர் அரசமைப்புச் சட்டப்படி பதவி வகிப்பவர். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. மக்களால் தேந்தெடுக்கப்பட்ட தமிழக அமைச்சரவையின் அறிவுரை இல்லாமல் எந்த செயலையும் செய்வதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அப்படியிருக்கும் போது தமிழக அரசுக்கு எதிராக நாள்தோறும் ஒரு எதிர்கட்சித் தலைவரைப் போல கருத்து தெரிவித்து வருகிறார். தமிழக ஆளுநர் மாளிகை என்பது, தமிழக பா.ஜ.க.வின் கிளை அலுவலகமாக மாறி வருவதை தமிழக மக்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள். – தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA

தமிழக ஆளுநர் என்பவர் அரசமைப்புச் சட்டப்படி பதவி வகிப்பவர். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. மக்களால் தேந்தெடுக்கப்பட்ட தமிழக அமைச்சரவையின் அறிவுரை இல்லாமல் எந்த செயலையும் செய்வதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அப்படியிருக்கும் போது தமிழக அரசுக்கு எதிராக நாள்தோறும் ஒரு எதிர்கட்சித் தலைவரைப் போல கருத்து தெரிவித்து வருகிறார். தமிழக ஆளுநர் மாளிகை என்பது, தமிழக பா.ஜ.க.வின் கிளை அலுவலகமாக மாறி வருவதை தமிழக மக்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள். – தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA

read more
எந்த அடிப்படை புரிதலும் இல்லாமல் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என அவசர கோலத்தில் ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசுவது தான் அண்ணாமலையின் அரசியலாக இருக்கிறது.  – தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA

எந்த அடிப்படை புரிதலும் இல்லாமல் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என அவசர கோலத்தில் ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசுவது தான் அண்ணாமலையின் அரசியலாக இருக்கிறது.  – தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA

read more
ஒரு குறிப்பிட்ட தொழிலதிபர்களை ஒன்றிய பா.ஜ.க. அரசின் பாரபட்சமான அணுகுமுறையினால் கொள்ளை லாபம் சம்பாதிக்க அனுமதிப்பதன் மூலம் பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் உள்ள உறவு அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து பலமுறை எதிர்கட்சிகள் ஆதாரத்துடன் குற்றம்சாட்டியும் பிரதமர் மோடியால் அதானியை கைவிட முடியவில்லை. இதற்கு பின்னாலே இருக்கிற ரகசியத்தை தான் ஹின்டன்பர்க் உள்ளிட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் அம்பலப்படுத்தின. – தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA

ஒரு குறிப்பிட்ட தொழிலதிபர்களை ஒன்றிய பா.ஜ.க. அரசின் பாரபட்சமான அணுகுமுறையினால் கொள்ளை லாபம் சம்பாதிக்க அனுமதிப்பதன் மூலம் பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் உள்ள உறவு அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து பலமுறை எதிர்கட்சிகள் ஆதாரத்துடன் குற்றம்சாட்டியும் பிரதமர் மோடியால் அதானியை கைவிட முடியவில்லை. இதற்கு பின்னாலே இருக்கிற ரகசியத்தை தான் ஹின்டன்பர்க் உள்ளிட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் அம்பலப்படுத்தின. – தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA

17-Jan-2025 அறிக்கை பிரதமர் மோடியின் ஆட்சியைப் பொறுத்தவரை எழை, எளியவர்களுக்கு பயனளிப்பதை விட சில குறிப...
read more
சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி, பசுவின் கோமியத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதோடு, பாக்டீரியா, பூஞ்சை, செரிமான கோளாறு உள்ளிட்ட பல உடல்நல பாதிப்புகளை எதிர்க்க சிறந்த மருத்துவ குணத்தை கொண்டுள்ளதால் அதை அருந்த வேண்டும் என்று நிகழ்த்திய உரை கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. மிகுந்த புகழ் பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் அறிவியல் ரீதியாக சிந்திக்காமல் பிற்போக்குத்தனமான, மூடநம்பிக்கையின் அடிப்படையில் பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி, பசுவின் கோமியத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதோடு, பாக்டீரியா, பூஞ்சை, செரிமான கோளாறு உள்ளிட்ட பல உடல்நல பாதிப்புகளை எதிர்க்க சிறந்த மருத்துவ குணத்தை கொண்டுள்ளதால் அதை அருந்த வேண்டும் என்று நிகழ்த்திய உரை கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. மிகுந்த புகழ் பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் அறிவியல் ரீதியாக சிந்திக்காமல் பிற்போக்குத்தனமான, மூடநம்பிக்கையின் அடிப்படையில் பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

read more
தமிழக மக்களுக்கு பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி பெற்றுத் தர தனது வாழ்நாள் முழுவதும் ஓய்வறியா உழைப்பை அளித்த தந்தை பெரியாரை, தமிழக அரசியலின் தற்குறி சீமான் கொச்சைப்படுத்தி பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். தந்தை பெரியார் பேசியதாக அவர் கூறுவதற்கு விடுதலை நாளேடு உள்ளிட்ட எதையாவது ஒரு ஆதாரத்தை அவர் காட்ட முடியுமா ? இத்தகைய அவதூறு கருத்துகளை பேசுகிற சீமானை தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். – தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA

தமிழக மக்களுக்கு பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி பெற்றுத் தர தனது வாழ்நாள் முழுவதும் ஓய்வறியா உழைப்பை அளித்த தந்தை பெரியாரை, தமிழக அரசியலின் தற்குறி சீமான் கொச்சைப்படுத்தி பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். தந்தை பெரியார் பேசியதாக அவர் கூறுவதற்கு விடுதலை நாளேடு உள்ளிட்ட எதையாவது ஒரு ஆதாரத்தை அவர் காட்ட முடியுமா ? இத்தகைய அவதூறு கருத்துகளை பேசுகிற சீமானை தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். – தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA

read more
1 2 3 22