கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்தது முதற்கொண்டு இந்தி, சமஸ்கிருத திணிப்பு என்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சிகளுக்கு இந்தி பேசாத மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஆயுள் காப்பீட்டுக் கழக இணைய தள முகப்பை இந்தி மயமாக்கியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும்.- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்தது முதற்கொண்டு இந்தி, சமஸ்கிருத திணிப்பு என்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சிகளுக்கு இந்தி பேசாத மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஆயுள் காப்பீட்டுக் கழக இணைய தள முகப்பை இந்தி மயமாக்கியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும்.- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

read more
கிராம காங்கிரஸ் கமிட்டிகள் மறுசீரமைக்கப்பட்டு, கட்டமைக்க மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். – பட்டியல்

கிராம காங்கிரஸ் கமிட்டிகள் மறுசீரமைக்கப்பட்டு, கட்டமைக்க மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். – பட்டியல்

read more
உத்தரபிரதேச மாநிலம், ஜான்சியில் மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வார்டின் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று இரவு ஏற்பட்ட தீவிபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகியும், மூச்சுத் திணறியும் உயிரிழந்த பரிதாப செய்தி அதிர்ச்சியையும், கவலையையும் தருகிறது. மேலும் 16 குழந்தைகள் பலத்த தீக்காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத காரணத்தாலும், நிர்வாக அலட்சியத்தாலும் இத்தகைய கொடூர உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

உத்தரபிரதேச மாநிலம், ஜான்சியில் மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வார்டின் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று இரவு ஏற்பட்ட தீவிபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகியும், மூச்சுத் திணறியும் உயிரிழந்த பரிதாப செய்தி அதிர்ச்சியையும், கவலையையும் தருகிறது. மேலும் 16 குழந்தைகள் பலத்த தீக்காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத காரணத்தாலும், நிர்வாக அலட்சியத்தாலும் இத்தகைய கொடூர உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

read more
இன்று உச்சநீதிமன்றத்தில் மொத்தமுள்ள 34 நீதிபதிகளில் பெரும்பான்மையானவர்கள் உயர்சாதியினரை சார்ந்தவர்களாக உள்ளனர். பட்டியலினம், பின்தங்கிய சமுதாயம், சிறுபான்மையின சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் தலா ஒருவர் தான் நீதிபதிகளாக உள்ளனர். இந்நிலையில் இத்தகைய மக்களுக்கு உச்சநீதிமன்றத்தில் நீதி கிடைப்பது கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது. அதேபோல, 11 மத்திய பல்கலைக் கழகங்களுக்கான எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லாத அவலநிலை உள்ளது. இந்த அநீதியை எதிர்த்துத் தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று தலைவர் ராகுல்காந்தி போராடி வருகிறார். அதைத் தான் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அவர்களும் தனது தேர்தல் பரப்புரையில் வலியுறுத்தி வருகிறார். இத்தகைய பரப்புரைகளின் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு கருத்தியல் ரீதியாக பெருகி வரும் பேராதரவை சகித்துக் கொள்ள முடியாத பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு எதிரானது என்ற அவதூறு குற்றச்சாட்டை கூறி வருகிறார். ஆனால் நாட்டு மக்கள் பிரதமர் மோடியின் அவதூறு பிரச்சாரத்திற்கு இரையாகாமல் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக திரண்டு வருவது கண்கூடாக தெரிகிறது. எனவே, பிரதமர் மோடியின் சந்தர்ப்பவாத அரசியல் நாட்டு மக்களிடம் எந்த வகையிலும் எடுபடப்போவதில்லை. – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

இன்று உச்சநீதிமன்றத்தில் மொத்தமுள்ள 34 நீதிபதிகளில் பெரும்பான்மையானவர்கள் உயர்சாதியினரை சார்ந்தவர்களாக உள்ளனர். பட்டியலினம், பின்தங்கிய சமுதாயம், சிறுபான்மையின சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் தலா ஒருவர் தான் நீதிபதிகளாக உள்ளனர். இந்நிலையில் இத்தகைய மக்களுக்கு உச்சநீதிமன்றத்தில் நீதி கிடைப்பது கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது. அதேபோல, 11 மத்திய பல்கலைக் கழகங்களுக்கான எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லாத அவலநிலை உள்ளது. இந்த அநீதியை எதிர்த்துத் தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று தலைவர் ராகுல்காந்தி போராடி வருகிறார். அதைத் தான் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அவர்களும் தனது தேர்தல் பரப்புரையில் வலியுறுத்தி வருகிறார். இத்தகைய பரப்புரைகளின் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு கருத்தியல் ரீதியாக பெருகி வரும் பேராதரவை சகித்துக் கொள்ள முடியாத பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு எதிரானது என்ற அவதூறு குற்றச்சாட்டை கூறி வருகிறார். ஆனால் நாட்டு மக்கள் பிரதமர் மோடியின் அவதூறு பிரச்சாரத்திற்கு இரையாகாமல் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக திரண்டு வருவது கண்கூடாக தெரிகிறது. எனவே, பிரதமர் மோடியின் சந்தர்ப்பவாத அரசியல் நாட்டு மக்களிடம் எந்த வகையிலும் எடுபடப்போவதில்லை. – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

read more
கடந்த 2021 ஆம் ஆண்டே நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல், காலம் தாழ்த்தி வருகிற மோடி அரசு உடனடியாக அதனை நடத்துவதோடு, அதனுடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டுமென்பது தான் தலைவர் ராகுல்காந்தியின் முக்கியமான கோரிக்கையாகும்..- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

கடந்த 2021 ஆம் ஆண்டே நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல், காலம் தாழ்த்தி வருகிற மோடி அரசு உடனடியாக அதனை நடத்துவதோடு, அதனுடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டுமென்பது தான் தலைவர் ராகுல்காந்தியின் முக்கியமான கோரிக்கையாகும்..- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

read more
மகாராஷ்டிரா மாநில தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சி என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். குஜராத் மாநில முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்த போது, கோத்ரா ரயில் எரிப்புக்கு பிறகு, ஆயிரக்கணக்கான அப்பாவி இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்ட போது உச்சநீதிமன்ற ஆணையின் பேரில் அமைக்கப்பட்ட ஆர்.கே. ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு நரேந்திர மோடியையும், அமித்ஷாவையும் பல மணிநேரம் விசாரித்தது. விசாரணைக்குப் பிறகு நீதிமன்ற தண்டனையிலிருந்து அவர்கள் தப்பினாலும், அவர்களின் கரங்களில் படிந்த ரத்த கரையை எக்காலத்திலும், எவராலும் துடைக்க முடியாது. அப்பாவி மக்களின் ரத்தத்தை உறிஞ்சிய ஒட்டுண்ணிகளாக இருந்தவர்கள் காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

மகாராஷ்டிரா மாநில தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சி என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். குஜராத் மாநில முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்த போது, கோத்ரா ரயில் எரிப்புக்கு பிறகு, ஆயிரக்கணக்கான அப்பாவி இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்ட போது உச்சநீதிமன்ற ஆணையின் பேரில் அமைக்கப்பட்ட ஆர்.கே. ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு நரேந்திர மோடியையும், அமித்ஷாவையும் பல மணிநேரம் விசாரித்தது. விசாரணைக்குப் பிறகு நீதிமன்ற தண்டனையிலிருந்து அவர்கள் தப்பினாலும், அவர்களின் கரங்களில் படிந்த ரத்த கரையை எக்காலத்திலும், எவராலும் துடைக்க முடியாது. அப்பாவி மக்களின் ரத்தத்தை உறிஞ்சிய ஒட்டுண்ணிகளாக இருந்தவர்கள் காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

09-Nov-2024 அறிக்கை மகாராஷ்டிரா மாநில தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் ஒர...
read more
பிரதமர் மோடி அறிவித்தபடி கருப்பு பணமோ, கள்ள பணமோ பயங்கரவாத நடவடிக்கைகளோ குறைந்தபாடில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது வரலாறு காணாத பொருளாதார பேரழிவாகவும், மக்களின் மீது தொடுக்கப்பட்ட கடுமையான தாக்குதலாகவும் தான் அமைந்து விட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த நவம்பர் 8 ஆம் நாள் மக்கள் சந்தித்த துன்பங்கள், துயரங்கள் குறித்து பிரதமர் மோடி என்றைக்குமே கவலைப்பட்டதாக தெரியவில்லை.- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

பிரதமர் மோடி அறிவித்தபடி கருப்பு பணமோ, கள்ள பணமோ பயங்கரவாத நடவடிக்கைகளோ குறைந்தபாடில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது வரலாறு காணாத பொருளாதார பேரழிவாகவும், மக்களின் மீது தொடுக்கப்பட்ட கடுமையான தாக்குதலாகவும் தான் அமைந்து விட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த நவம்பர் 8 ஆம் நாள் மக்கள் சந்தித்த துன்பங்கள், துயரங்கள் குறித்து பிரதமர் மோடி என்றைக்குமே கவலைப்பட்டதாக தெரியவில்லை.- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

08-Nov-2024 அறிக்கை கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று, புழக்கத்தில் இருந்த ரூபாய் 500, ரூபாய் 1000 நோட்டுகளை பண...
read more
அமரன் திரைப்படத்திற்கு முழுமையான வரிவிலக்கு அளித்து, தமிழக மக்கள் அனைவரும் பார்க்கக் கூடிய வாய்ப்பை வழங்குகிற வகையில், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். அதேநேரத்தில், அனைத்து பள்ளி மாணவர்களும் பார்க்கிற வகையில் கல்வித்துறை மூலம் சுற்றறிக்கை அனுப்பி அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமேயானால், மாணவர்களிடையே தேசபக்தி உணர்வை மேலோங்க செய்வதற்கு இதைவிட ஒரு அரிய வாய்ப்பு நமக்கு கிடைக்காது. எனவே, தமிழக முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

அமரன் திரைப்படத்திற்கு முழுமையான வரிவிலக்கு அளித்து, தமிழக மக்கள் அனைவரும் பார்க்கக் கூடிய வாய்ப்பை வழங்குகிற வகையில், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். அதேநேரத்தில், அனைத்து பள்ளி மாணவர்களும் பார்க்கிற வகையில் கல்வித்துறை மூலம் சுற்றறிக்கை அனுப்பி அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமேயானால், மாணவர்களிடையே தேசபக்தி உணர்வை மேலோங்க செய்வதற்கு இதைவிட ஒரு அரிய வாய்ப்பு நமக்கு கிடைக்காது. எனவே, தமிழக முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

read more
அனைத்து துறைகளும் காவி மயமாக்கப்பட்டு வருகிற சூழலில், கல்வித்துறையையும் காவி மயமாக்குகிற முயற்சியாக இந்த நியமனத்தை செய்திருக்கிறார்.- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

அனைத்து துறைகளும் காவி மயமாக்கப்பட்டு வருகிற சூழலில், கல்வித்துறையையும் காவி மயமாக்குகிற முயற்சியாக இந்த நியமனத்தை செய்திருக்கிறார்.- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

read more
இந்தியாவை பொருளாதார வல்லரசாக உயர்த்துவேன் என்று மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டின் அடிப்படையில் பேசுகிற பிரதமர் மோடியின் ஆட்சியில், எவ்வாறு மக்களின் வாழ்க்கை தரமும், மனிதவளமும் குன்றி வறுமையின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதை ஐ.நா. சபையின் தரவரிசை பட்டியல் அம்பலப்படுத்தியிருக்கிறது. எந்த புள்ளி விவரத்தையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிற பா.ஜ.க.வினர், ஐ.நா. சபை ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கைக்கு என்ன பதில் கூறப் போகிறார்கள் ? மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, வாக்கு வங்கியை விரிவுபடுத்தி தேர்தலில் வெற்றி பெறுவதை நோக்கமாக கொண்ட ஆர்.எஸ்.எஸ். வழிவந்த பா.ஜ.க.விற்கு மக்களின் உண்மையான வளர்ச்சி மீது அக்கறையில்லை என்பதையே ஐ.நா. சபையின் புள்ளி விவரம் சுட்டிக் காட்டுகிறது. இத்தகைய அவலநிலை நீடிக்குமேயானால், பா.ஜ.க. ஆட்சியாளர்கள் நாட்டு மக்களின் கடும் கோபத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன். – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

இந்தியாவை பொருளாதார வல்லரசாக உயர்த்துவேன் என்று மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டின் அடிப்படையில் பேசுகிற பிரதமர் மோடியின் ஆட்சியில், எவ்வாறு மக்களின் வாழ்க்கை தரமும், மனிதவளமும் குன்றி வறுமையின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதை ஐ.நா. சபையின் தரவரிசை பட்டியல் அம்பலப்படுத்தியிருக்கிறது. எந்த புள்ளி விவரத்தையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிற பா.ஜ.க.வினர், ஐ.நா. சபை ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கைக்கு என்ன பதில் கூறப் போகிறார்கள் ? மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, வாக்கு வங்கியை விரிவுபடுத்தி தேர்தலில் வெற்றி பெறுவதை நோக்கமாக கொண்ட ஆர்.எஸ்.எஸ். வழிவந்த பா.ஜ.க.விற்கு மக்களின் உண்மையான வளர்ச்சி மீது அக்கறையில்லை என்பதையே ஐ.நா. சபையின் புள்ளி விவரம் சுட்டிக் காட்டுகிறது. இத்தகைய அவலநிலை நீடிக்குமேயானால், பா.ஜ.க. ஆட்சியாளர்கள் நாட்டு மக்களின் கடும் கோபத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன். – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

18-Oct-2024 அறிக்கை கடந்த 2014, 2019 மக்களவை தேர்தல் பரப்புரைகளின் போது, 2024 ஆம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரத்...
read more
1 9 10 11 12 13 18