Tag: செல்வப்பெருந்தகை
இந்தியாவை பொருளாதார வல்லரசாக உயர்த்துவேன் என்று மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டின் அடிப்படையில் பேசுகிற பிரதமர் மோடியின் ஆட்சியில், எவ்வாறு மக்களின் வாழ்க்கை தரமும், மனிதவளமும் குன்றி வறுமையின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதை ஐ.நா. சபையின் தரவரிசை பட்டியல் அம்பலப்படுத்தியிருக்கிறது. எந்த புள்ளி விவரத்தையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிற பா.ஜ.க.வினர், ஐ.நா. சபை ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கைக்கு என்ன பதில் கூறப் போகிறார்கள் ? மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, வாக்கு வங்கியை விரிவுபடுத்தி தேர்தலில் வெற்றி பெறுவதை நோக்கமாக கொண்ட ஆர்.எஸ்.எஸ். வழிவந்த பா.ஜ.க.விற்கு மக்களின் உண்மையான வளர்ச்சி மீது அக்கறையில்லை என்பதையே ஐ.நா. சபையின் புள்ளி விவரம் சுட்டிக் காட்டுகிறது. இத்தகைய அவலநிலை நீடிக்குமேயானால், பா.ஜ.க. ஆட்சியாளர்கள் நாட்டு மக்களின் கடும் கோபத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன். – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.
18-Oct-2024 அறிக்கை கடந்த 2014, 2019 மக்களவை தேர்தல் பரப்புரைகளின் போது, 2024 ஆம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரத்...
சென்னை மாநகர மக்கள் அனைவரும் நிம்மதியடைகிற வகையில் இன்று இயல்பு நிலை திரும்பியிருக்கிறது. இதற்கு தமிழக அரசின் புயல் வேக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே முக்கிய காரணமாகும். எதையும் விமர்சனம் செய்து வந்த ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களே தமிழக அரசின் நிவாரண நடவடிக்கைகளை பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தமிழக அரசு கடந்த காலங்களில் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உரிய பலன் கிடைத்துள்ளது. எதிர்கட்சியினரே விமர்சிக்க முடியாத அளவிற்கு தமிழக அரசின் செயல்பாடுகளை அனைவரும் பாராட்டுகிறார்கள். இத்தகைய சீரிய முயற்சிகளை திட்டமிட்டு, செயல்படுத்திய தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து பெருமக்களையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார பாராட்டுகிறேன். – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.
17-Oct-2024 அறிக்கை கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையின் பாதிப்பு கடுமையாக இருக்கும்...
ஹரியானா சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை, வெளிவந்த முடிவுகளின்படி மொத்தமுள்ள 90 இடங்களில் பா.ஜ.க. 48 இடங்களையும், 39.9 சதவிகித வாக்குகளையும் பெற்றிருக்கிறது. மேலும் காங்கிரஸ் கட்சி 39.3 சதவிகித வாக்குகளை பெற்று 37 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. ஏறத்தாழ சம அளவில் வாக்குகளை பெற்ற காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் தோல்வியடைந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது அனைவரையும் அதிர்;ச்சியில் ஆழ்த்தியதோடு, பெருவாரியாக காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்பதோடு, 10 ஆண்டுகால மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சி அகற்றப்படும் என்ற எதிர்பார்ப்பை சிதைக்கும் வகையில் இந்த முடிவுகள் அமைந்துள்ளன. – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.
09-Oct-2024 அறிக்கை நடந்து முடிந்த ஹரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து அனைத்...
தொடர்ந்து மோடி ஆட்சியில் நடைபெறும் ஜனநாயக விரோத, பாசிச, பிற்போக்கு நடவடிக்கைகளை முறியடித்து வெற்றிகளை குவிக்க வேண்டுமென தலைவர் ராகுல்காந்தி அவர்களை, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 100-வது நாளில் மனதார வாழ்த்துகிறேன், போற்றுகிறேன். – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ
05-Oct-2024 அறிக்கை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களவையில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சித் தலைவர் இல...
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அதிகாரங்களை குவித்துக் கொண்டு ஒற்றை ஆட்சி மூலம் செயல்பட்டு வருகிறது. கடந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மாநில கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சி அமைத்த பிறகும் பா.ஜ.க.வின் மாநில விரோதப் போக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ
04-Oct-2024 அறிக்கை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அதிகாரங்களை குவித்துக் கொண்டு ஒற்றை ...


