செய்தி வெளியீடுகள்

ஒரு குறிப்பிட்ட தொழிலதிபர்களை ஒன்றிய பா.ஜ.க. அரசின் பாரபட்சமான அணுகுமுறையினால் கொள்ளை லாபம் சம்பாதிக்க அனுமதிப்பதன் மூலம் பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் உள்ள உறவு அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து பலமுறை எதிர்கட்சிகள் ஆதாரத்துடன் குற்றம்சாட்டியும் பிரதமர் மோடியால் அதானியை கைவிட முடியவில்லை. இதற்கு பின்னாலே இருக்கிற ரகசியத்தை தான் ஹின்டன்பர்க் உள்ளிட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் அம்பலப்படுத்தின. – தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA

17-Jan-2025 அறிக்கை பிரதமர் மோடியின் ஆட்சியைப் பொறுத்தவரை எழை, எளியவர்களுக்கு பயனளிப்பதை விட சில குறிப்பிட்ட தொழிலதிபர்கள் சொத்து குவிக்கவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதானி, அம்பானி உள்ளிட்டவர்களின் சொத்து பலமடங்கு குவிந்திருக்கிறது. ஹின்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 2023 இல் அதானி குழும முறைகேடுகளை அம்பலப்படுத்தி, அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் கடும் வீழச்சியடைந்தன. இதனால் ரூபாய் 12 லட்சம் கோடியை இழந்த அதானி, ...

சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி, பசுவின் கோமியத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதோடு, பாக்டீரியா, பூஞ்சை, செரிமான கோளாறு உள்ளிட்ட பல உடல்நல பாதிப்புகளை எதிர்க்க சிறந்த மருத்துவ குணத்தை கொண்டுள்ளதால் அதை அருந்த வேண்டும் என்று நிகழ்த்திய உரை கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. மிகுந்த புகழ் பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் அறிவியல் ரீதியாக சிந்திக்காமல் பிற்போக்குத்தனமான, மூடநம்பிக்கையின் அடிப்படையில் பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

20-Jan-2025 அறிக்கை சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி, பசுவின் கோமியத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதோடு, பாக்டீரியா, பூஞ்சை, செரிமான கோளாறு உள்ளிட்ட பல உடல்நல பாதிப்புகளை எதிர்க்க சிறந்த மருத்துவ குணத்தை கொண்டுள்ளதால் அதை அருந்த வேண்டும் என்று நிகழ்த்திய உரை கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. மிகுந்த புகழ் பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் அறிவியல் ரீதியாக சிந்திக்காமல் ...

தமிழக மக்களுக்கு பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி பெற்றுத் தர தனது வாழ்நாள் முழுவதும் ஓய்வறியா உழைப்பை அளித்த தந்தை பெரியாரை, தமிழக அரசியலின் தற்குறி சீமான் கொச்சைப்படுத்தி பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். தந்தை பெரியார் பேசியதாக அவர் கூறுவதற்கு விடுதலை நாளேடு உள்ளிட்ட எதையாவது ஒரு ஆதாரத்தை அவர் காட்ட முடியுமா ? இத்தகைய அவதூறு கருத்துகளை பேசுகிற சீமானை தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். – தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA

09-Jan-2025 அறிக்கை தமிழக மக்களுக்கு பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி பெற்றுத் தர தனது வாழ்நாள் முழுவதும் ஓய்வறியா உழைப்பை அளித்த தந்தை பெரியாரை, தமிழக அரசியலின் தற்குறி சீமான் கொச்சைப்படுத்தி பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். தந்தை பெரியார் பேசியதாக அவர் கூறுவதற்கு விடுதலை நாளேடு உள்ளிட்ட எதையாவது ஒரு ஆதாரத்தை அவர் காட்ட முடியுமா ? இத்தகைய அவதூறு கருத்துகளை பேசுகிற சீமானை தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். தமிழக ...

சுற்றறிக்கை

03-Jan-2025 கடந்த 19.9.2024 அன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் எனது தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார், செயலாளர் திரு. சூரஜ் எம்.என். ஹெக்டே ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியை சிறப்பாக செயல்படுத்துவது குறித்தும், தமிழக காங்கிரஸ் கட்சியில் தற்போதுள்ள மாநில செயற்குழு, மாநில துணைத் தலைவர்கள், மாநில பொதுச் செயலாளர்கள், மாநில செயலாளர்கள் மற்றும் மாவட்டத் ...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்துகின்ற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வருகிற 7.1.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் எனது தலைமையில் நடைபெறுகிற இரங்கல் கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று மறைந்த தலைவர்களின் திருவுருவப் படங்களை திறந்து வைத்து இரங்கல் உரை நிகழ்த்துகிறார் – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

03-Jan-2025 அறிக்கை சமீபத்தில் மறைந்த உலகத்தின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணராக கருதப்பட்ட இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்துகின்ற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வருகிற 7.1.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் எனது தலைமையில் நடைபெறுகிற இரங்கல் கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு ...