தியாகத்திலே பிறந்து, தியாகம் செய்வதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற, மத கோட்பாடுகளைப் போற்றி பாதுகாக்கிற வகையில் வாழ்ந்து வருகிற இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

பக்ரீத் வாழ்த்துச் செய்தி | 09 July 2022

இஸ்லாமியர்கள் தியாகத் திருநாளாக கொண்டாடுகிற பக்ரீத் பண்டிகை, தியாகத்தை போற்றுகிற நாளாகும். உலகோர் அனைவரும் ஒரே தாய், தந்தை வழிவந்தவர்கள் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம், ஏகத்துவம் போன்றவற்றை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ முற்படுவதே மனித இனத்தின் குறிக்கோளாகும்.

ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்துத்வா கோட்பாடுகளை பின்பற்றி, அனைத்து நிலைகளிலும் புகுத்துவதன் மூலம் 20 கோடி சிறுபான்மை மக்களுக்கு எதிரான மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் நடைபெற்று வருகிறது. சிறுபான்மையின மக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வருகிறார்கள். சம உரிமை, சம வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை அனைவரும் சமமாகப் பெறுவதே மக்களாட்சியின் தத்துவமாகும். அந்த முயற்சிகள் வெற்றி பெற மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்.

சமீபகாலமாக, இஸ்லாமியர்கள் சந்தித்து வருகிற அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தால், அவர்களது உடமைகள் புல்டோசர்கள் மூலமாக இடித்து தள்ளப்படுகின்றன. பா.ஜ.க.வின் புல்டோசர் கலாச்சாரம் சிறுபான்மையின மக்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய அடக்குமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றம் எடுக்கின்ற நடவடிக்கைகள் கூட உரிய பலனைத் தர முடியாத சூழல் உருவாகி வருகிறது. இந்த அவலநிலையிலிருந்து சிறுபான்மையின மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

தியாகத்திலே பிறந்து, தியாகம் செய்வதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற, மத கோட்பாடுகளைப் போற்றி பாதுகாக்கிற வகையில் வாழ்ந்து வருகிற இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.எஸ். அழகிரி